கோவை விமான நிலையத்தில் குவிந்த விஜய் ரசிகர்கள்- தடியை கொண்டு கூட்டத்தை கலைத்த போலிசார்…

published 7 hours ago

கோவை விமான நிலையத்தில் குவிந்த விஜய் ரசிகர்கள்- தடியை கொண்டு கூட்டத்தை கலைத்த போலிசார்…

கோவை: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய் பூத் கமிட்டி மாநாட்டிற்காக இன்று கோவை விமான நிலையம் வருகிறார். அவரைக்காண ஏராளமான ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அங்கு திரண்டுள்ளனர்.  


விஜய் வருகையை முன்னிட்டு விமான நிலையத்திற்குள் 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஒலிபெருக்கி மூலம் போலீசார் அவ்வப்போது ரசிகர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும், விமான நிலையத்திற்குள் வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் எச்சரித்தனர்.
 

இருப்பினும், ரசிகர்களின் கூட்டம் கலையாமல் தொடர்ந்து ஆரவாரம் செய்து கோஷங்கள் எழுப்பிய வண்ணம் இருந்தது. இதனால், அவர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியைக்கொண்டு தடுப்புகள் மீது தட்டி எச்சரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே, தவெக பொதுச்செயலாளர் புஜ்ஜி ஆனந்த் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். 

இதனைக் கண்ட தொண்டர்களும், ரசிகர்களும் மேலும் உற்சாகமடைந்து கோஷங்களை எழுப்பியதோடு, விமான நிலையத்தின் உள்ளே நுழைய முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. போலீசார் தொடர்ந்து கூட்டத்தை தடியை கொண்டு கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe