கோவையில் குட்கா பறிமுதல் செய்ய சென்ற போது கிடைத்த லட்சக்கணக்கான பணம்- குட்காவை எரித்த வியாபாரி குடும்பத்தார்...

published 19 hours ago

கோவையில் குட்கா பறிமுதல் செய்ய சென்ற போது கிடைத்த லட்சக்கணக்கான பணம்- குட்காவை எரித்த வியாபாரி குடும்பத்தார்...

கோவை: கோவை, குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் உதவி ஆய்வாளர் அழகு செல்வன் மற்றும் போலீஸ் சேட்டுகள் கண்ணன் குமார் சக்திவேல் அடங்கிய போலீஸ் படையினர் சுண்டக்காமத்தூர் சாலையில் உள்ள  மாரியம்மன் கோவில் ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்து சோதனை செய்தனர்.

அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 2  கிலோ  குட்கா புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் இது தொடர்பாக அவரது வீட்டில் சோதனை செய்ய போது அவரது மகன் குட்கா பொருளை எரித்துள்ளார். 

மேலும் வீட்டிற்குள் நடத்தப்பட்ட சோதனையில்  10. 5 லட்சம் பணத்தையும் போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக கடை வியாபாரி கண்ணன் மற்றும் அவரது மகன் கார்த்திபனை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe