சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு ரூ. 2.94 கோடி மதிப்புள்ள 5.6 கிலோ தங்கம் கடத்தல்: 2 பேர் கைது

published 2 years ago

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு ரூ. 2.94 கோடி மதிப்புள்ள 5.6 கிலோ தங்கம் கடத்தல்: 2 பேர் கைது

 

கோவை: கோவை விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து  அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்காணித்துத்  தங்கத்தைக் கடத்தி வரும் பயணிகளை மடக்கிப் பிடித்து வருகின்றனர். இந்தநிலையில் சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானத்தில் வந்த 6 பயணிகளைப் பிடித்து அவர்களது உடைமைகளைத் தீவிர சோதனை செய்தனர். அதில் 2 பயணிகள் உள்ளாடைகள், பாக்கெட்கள், பேன்ட் ஆகியவற்றில் 5.6 கிலோ தங்க நகைகளை மறைத்து  வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து ரூ. 2. 94 கோடி மதிப்பிலான 5. 6 கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த 2 பேரையும் பிடித்து  விசாரணை  நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சென்னையைச் சேர்ந்த முகமது அப்சல் (வயது 32) மற்றும் திருச்சியைச் சேர்ந்த கிருஷ்ணன் (66)  என்பது தெரியவந்தது.

இதில் முகமது அப்சல் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தங்கத்தைக் கடத்தி வந்ததால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

50 லட்சம் மதிப்பிலான தங்கத்தைக் கடத்தி வந்த கிருஷ்ணன் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். மேலும் தங்கக் கடத்தலில் வேறு எவருக்கும் தொடர்பு உள்ளதா என அதிகாரிகள் தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe