கோவையில் மதுகுடிக்க பணம் கொடுக்காததால் ஆத்திரம்: தொழிலாளிக்கு நடந்த விபரீதம்

published 2 years ago

கோவையில் மதுகுடிக்க பணம் கொடுக்காததால் ஆத்திரம்: தொழிலாளிக்கு நடந்த விபரீதம்

 

கோவை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிந்துகுமார் (வயது 35). இவர் கோவை போத்தனூர் அருகேயுள்ள திருமுருகன் நகரில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ஒருவருடன் எல். ஐ. சி காலனியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 4 பேர் பிந்துகுமாரிடம் மது குடிக்கப் பணம் கொடுக்கும்படி கேட்டனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து அங்கிருந்த பீர் பாட்டிலை உடைத்து பிந்துகுமாரின் கழுத்தில்  குத்தினர்.

பின்னர் அவரிடமிருந்த ரூ.5 ஆயிரம் பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய பிந்துகுமாரை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போத்தனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த 4 பேரைத் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe