கோவையில் 'ஆட்டோ தம்பி' நூலகத்தைக் காவல் ஆணையர் தொடக்கி வைத்தார்

published 2 years ago

கோவையில் 'ஆட்டோ தம்பி' நூலகத்தைக் காவல் ஆணையர் தொடக்கி வைத்தார்

 

கோவை : 'ஆட்டோ தம்பி' என்ற பெயரில் ஆட்டோவில் நம்மைத் தேடி வரும் நூலகத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார். கோவையில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களது பயணத்திற்கு ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றனர்.

அவ்வாறு ஆட்டோவில் பயணிப்பவர்களும், ஆட்டோ இயங்காத நேரத்தில் ஓட்டுநர்களும் கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே பயணிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக 'ஆட்டோ தம்பி' என்ற பெயரில் ஆட்டோ நூலகம் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று 'ஆட்டோ தம்பி' நூலகத்தைக் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். ரூ.20 ஆயிரம் மதிப்பில் இந்த ஆட்டோ நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்டோவில் புத்தகங்கள், நாவல்கள் இடம் பெற்றுள்ளன. சோதனை அடிப்படையில் துடியலுரைச் சேர்ந்த சையது என்பவரின் ஆட்டோவில் இந்த ஆட்டோ நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

"ஆட்டோ தம்பி" என்ற இந்த ஆட்டோ நூலகத்தைத் தொலைபேசி மூலம் அழைத்து தங்களது இருப்பிடத்திற்கு வரவழைத்துப் பயணிக்கலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe