சென்னை கல்லூரி மாணவியைக் கற்பழித்த திரைத்துறை தயாரிப்பாளர் கைது

published 2 years ago

சென்னை கல்லூரி மாணவியைக் கற்பழித்த திரைத்துறை தயாரிப்பாளர் கைது

கோவை: சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்துறை நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

"நான் 2019-ஆம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன். எனக்குள் திரைத்துறையில் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த சமயத்தில் கரூர் நல்லிப்பாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன் (32) என்பவர் புதிய திரைப்படம் ஒன்று தயாரிக்கப் போவதாகவும், அதற்குக் கதாநாயகி தேர்வு நடப்பதாகவும் கூறி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். சமூக வலைத்தளங்களில் வந்த அறிவிப்பைப் பார்த்து நான் பார்த்திபனைத் தொடர்பு கொண்டேன். அவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கதாநாயகி தேர்வு நடப்பதாகவும், அங்கு வருமாறும் என்னை அழைத்தார்.

நானும் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையில் அவர் சொன்ன பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள தங்கும் விடுதிக்குச் சென்றேன். அங்குப் பார்த்திபன் இருந்தார். அவர், தான் ஒரு திரைத்துறை தயாரிப்பாளர் எனக் கூறி என்னிடம் கேள்விகள் கேட்டார். சிறிது நேரத்தில் குளிர்பானம் கொடுத்தார். அதனை வாங்கி குடித்ததும் நான் மயங்கி விட்டேன். இதனைப் பயன்படுத்தி பார்த்திபன் என்னைக் கற்பழித்து விட்டார். மயக்கம் தெளிந்து விழித்ததும் அவரை நான் கண்டித்தேன்.

என்னைச் சமாதானம் செய்து உன்னை நிச்சயம் கதாநாயகி ஆக்குவேன் என்றார். இப்படி ஆசைவார்த்தைகள் கூறியே மீண்டும், மீண்டும் என்னை வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் நான் கர்ப்பம் ஆனேன். குழந்தை பிறந்தால் திரைத்துறையில் நடிக்க முடியாது என்று கூறி கருவையும் கலைக்கச் செய்தார்.

நான் என்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியபோது மறுத்தார். அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற விவரம் எனக்குப் பின்னர் தெரியவந்தது. இதேபோல் மேலும் பல பெண்களை அவர் ஏமாற்றியதையும் நான் அறிந்தேன். என்னை ஏமாற்றிக் கற்பழித்த பார்த்திபன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அவர் புகாரில் கூறியிருந்தார். அதன்பேரில் காவல்துறை பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறை தேடுவதை அறிந்து பார்த்திபன் தலைமறைவாக இருந்தார்.

இந்தநிலையில் நேற்று ஆய்வாளர் கோப்பெருந்தேவி தலைமையிலான காவல்துறையினர் பார்த்திபனைக் கைது செய்தனர். கோவை 1-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பார்த்திபன், பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கரூரைச் சேர்ந்த பார்த்திபன், சமீப காலமாகக் கோவை சரவணம்பட்டி கே. புதுப்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். இங்கும் ஒரு பெண்ணை அவர் ஏமாற்றி திருமணம் செய்து நகைகளை மோசடி செய்து விட்டதாகப் புகார் எழுந்தது. அந்த பெண் ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe