கோவையில் சிகரெட் பிடித்ததைத் தந்தை கண்டித்ததால் 13 வயது சிறுவன் தற்கொலை

published 2 years ago

கோவையில் சிகரெட் பிடித்ததைத் தந்தை கண்டித்ததால் 13 வயது சிறுவன் தற்கொலை

கோவை: கோவை சவுரிப்பாளையம் மாதா கோவில் வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 37), ஆட்டோ ஓட்டுநர். இவரது மகன் தவ்சிக் மவுலிஸ் (13). குட்கா, சிகரெட் பழக்கமுடைய இவர் பள்ளிக்குச் செல்லாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவன் மவுலிஸ் சவுரிப்பாளையம் அருகே நின்று கொண்டு சிகரெட் பிடித்துள்ளார். இதை அந்த வழியாக ஆட்டோவில் வந்த அவரது தந்தை சதீஷ்குமார் பார்த்துள்ளார். மகன் சிகரெட் பிடிப்பதைப் பார்த்து வேதனையறிந்த அவர் மவுலிசை திட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு விட்டு வேலைக்குச் சென்று விட்டார்.

பின்னர் இரவில் சதீஷ்குமார் வீடு திரும்பினார். அப்போது வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவைத் திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த சதீஷ்குமார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மகன் தவ்சிக் மவுலிஸ் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியில் கதறி அழுத அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் தவ்சிக் மவுலிஸ் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து பீளமேடு காவல்துறையினர் வாக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 13 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe