கோவையில் ரெயில் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி

published 2 years ago

கோவையில் ரெயில் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி

 

கோவை: வடகோவை - பீளமேடு  ரெயில்வே தண்டவாளம் டெக்ஸ்டூல் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாகக் கோவை ரெயில்வே போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 
அங்கு இறந்து கிடந்த முதியவரின் உடலைச் சோதனை செய்தனர். அவர் ஸ்வெட்டர் மற்றும் காபி நிற பேண்ட் அணிந்திருந்தார். பின்னர் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் ரெயில் தண்டவாளத்தைக் கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe