புதிய ஊதிய உயர்வை டான் டீ நிர்வாகம் வழங்க கோரி வால்பாறை தொழிலாளர்கள் மனு

published 2 years ago

புதிய ஊதிய உயர்வை டான் டீ நிர்வாகம் வழங்க கோரி வால்பாறை தொழிலாளர்கள் மனு

கோவை:  புதிய உயர்வை டான் டீ நிர்வாகம் வழங்க வேண்டும் என்று வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து தோட்ட தொழிலாளர்கள் அளித்த மனுவில் மனுவில் கூறியிருப்பதாவது :

வால்பாறை வட்டம் சின்கோனாவில் 500க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றோம். 80 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் வசித்து வரும் நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஜூலையில் அரசு தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு 425.40 ரூபாயாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை புதிய உயர்வை டான் டீ நிர்வாகம் வழங்காமல் இருந்து வருகிறது. எனவே உடனடியாக நிலுவையில் உள்ள தொகையையும் வழங்க வேண்டிய ஊதிய உயர்வையும் வழங்க வேண்டும் .

அதேபோல் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நிலையில் தாங்கள் வெளியேற கூறி வருகின்றனர். மேலும் வால்பாறை டிவிசன் லாசல் கோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை நீலகிரியில் இயங்கும் மற்ற தோட்டங்களுக்கு பணி மாறுதல் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கோவையில் சில்க் மார்க் தரத்துடன் கிடைக்கும் பட்டு சேலைகள்.. எங்கே..? என்னென்ன? முழு விவரங்களுக்கு இந்த வீடியோவை காணலாம்…  https://youtu.be/YoNfhv5ckJE
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe