கோவையில் கியாஸ் கசிந்து தீ விபத்து: விரைந்து செயல்பட்ட தீயணைப்புத் துறை

published 2 years ago

கோவையில் கியாஸ் கசிந்து தீ விபத்து: விரைந்து செயல்பட்ட தீயணைப்புத் துறை

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கோவை: கோவை தொண்டாமுத்தூர் போளுவாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி, தொழிலாளி. இவரது வீட்டில் கியாஸ் சிலிண்டர் தீர்ந்ததால் புதிய கியாஸ் சிலிண்டரை வாங்கினர்.

அதனை அடுப்பில் பொருத்தி அவரது மனைவி டீ வைத்தார். அப்போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சின்னசாமி தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe