சிங்காநல்லூர் கால்வாய் பாலத்தை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

published 1 year ago

சிங்காநல்லூர் கால்வாய் பாலத்தை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கால்வாய் பாலம் முறையாக தூர்வாரப்படாமல் இருப்பதால் 30 நிமிடம் பெய்த மழைக்கே வீடுகளுக்குள் சாக்கடை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

கோவை மாநகராட்சி வார்டு எண் 59க்கு உட்பட்ட சிங்காநல்லூரில் கிருஷ்ணம்ம நாயக்கர் வீதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கால்வாய் பாலம் அமைந்துள்ளது. இவ்வழியாக வரும் கழிவுநீர் இந்த கால்வாய் பாலம் வழியாகச் சென்று சிங்காநல்லூர் குளத்தை சென்றடைகிறது.

இதனிடையே கோவையின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்தது. சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழைக்கே இந்த கால்வாய் பாலம் முழுவதும் நிரம்பியது. இதனால் அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவு நீர் புகுந்தது. பொதுமக்கள் பயன்படுத்தக் கூடிய தண்ணீர் தொட்டிகளில் கழிவுநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை பெய்யும் பொழுதெல்லாம் இந்த பிரச்சனையைச் சந்தித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும் போதெல்லாம் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தால் அப்போது மட்டும் பெயரளவில் சுத்தப்படுத்திவிட்டு செல்வதாகவும், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் உடனடியாக கால்வாய் பாலத்தை தூர்வாரி சுத்தப்படுத்துவதோடு, வீடுகள் அருகே இருக்கும் சாக்கடைகளையும் வாரந்தோறும் சுத்தப்படுத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe