கட்டுமான பணியின் போது நிலை தடுமாறி விழுந்து தொழிலாளி பரிதாப பலி

published 1 year ago

கட்டுமான பணியின் போது நிலை தடுமாறி விழுந்து தொழிலாளி பரிதாப பலி

கோவை: மேட்டுப்பாளையம் இரும்பாறையை சேர்ந்தவர் தங்கராஜ்(37). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட் அருகே ஆர்.ஜி.தெருவில் நடைபெறும் புதிய கட்டிடத்தின் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது அவர் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe