அன்னூர் அருகே மோட்டார் பம்பு திருடிய 3 பேர் கைது

published 1 year ago

அன்னூர் அருகே மோட்டார் பம்பு திருடிய 3 பேர் கைது

கோவை: கோவை அன்னூர் அருகே திப்புநாயக்கன்பாளையத்ததைச் சேர்ந்தவர் மூர்த்தி (47), விவசாயி. இவர் தனது தோட்டத்து அறையில் பழுது பார்ப்பதற்காக 25 மீட்டர் கம்பியுடன் கூடிய மோட்டார் பம்ப் ஒன்றை வைத்திருந்தார். 

சம்பவத்தன்று மூர்த்தி தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு 3 வாலிபர்கள் மோட்டார் பம்பை திருடிக் கொண்டு ஓடுவதை பார்த்த அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 3 வாலிபர்களையும் விரட்டி பிடித்து அன்னூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில், அவர்கள் அன்னூர் வடக்கலூரைச் சேர்ந்த அருள்பிரகாஷ் (33), ஜீவானந்தம் (33) மற்றும் சின்னதுரை (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe