கோவையில் கோவிலுக்குள் புகுந்து சுவாமி சிலைகள் சேதம் - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

published 2 years ago

கோவையில் கோவிலுக்குள் புகுந்து சுவாமி சிலைகள் சேதம் - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள கருப்பராயர் மற்றும் முனியப்பர் கோவில் சிலைகளை உடைத்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை நஞ்சுண்டாபுரம் கிழக்கு புதூர் பகுதியில் பழமையான கருப்பராயர் மற்றும் முனியப்பர் கோவில் அமைந்துள்ளது. இத்தெய்வங்களை உள்ளூர் மக்கள் தங்கள் காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர். 

இந்நிலையில் நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலிலிருந்த கருப்பராயர் மற்றும் முனியப்பர் சிலைகளைச் சேதப்படுத்திச் சென்றுள்ளனர். இன்று அமாவாசையை முன்னிட்டு வழக்கமான வழிபாட்டிற்காகப் பொதுமக்கள் சென்று பார்த்த போது சிலைகள் சேதப்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் போத்தனூர் போலீசுக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிலைகளைச் சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe