கோவையில் சுயநினைவை இழந்து இறந்து கிடந்த மருத்துவர்

published 1 year ago

கோவையில் சுயநினைவை இழந்து இறந்து கிடந்த மருத்துவர்

கோவை: கோவை போத்தனூர் நஞ்சுண்டாபுரம் ரோட்டை சேர்ந்தவர் ராகவேந்திரன் (வயது 68). தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் பிருத்விராஜ் (வயது 33).

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் டாக்டராக பணியாற்றி வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று ராகவேந்திரன் தனது மனைவியுடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மணப்பாறை சென்றார்.

பின்னர் அங்கிருந்து தனது மகனிடம் பேச செல்போன் மூலம் அழைத்தார். பலமுறை அழைத்தும் அவரது அழைப்பை பிருத்விராஜ் ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராகவேந்திரன் பக்கத்து வீட்டு வாலிபர் ஒருவரை தொடர்பு கொண்டு செல்போன் அழைப்பை தனது மகன் எடுக்கவில்லை. அவரை சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.

அந்த வாலிபர் வீட்டுக்கு சென்று பார்த்த போது பிருத்விராஜ் சுயநினைவு இல்லாமல் மயங்கி விழுந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் ஆம்புலன்ஸ் மூலம் பிருத்விராஜை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் உடல் நல குறைவால் இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe