கோவையில் சுவர் இடிந்து விழுந்து படுகாயம் அடைந்த சிறுவன் பரிதாப பலி

published 1 year ago

கோவையில் சுவர் இடிந்து விழுந்து படுகாயம் அடைந்த சிறுவன்  பரிதாப பலி

கோவை:  சுவர் இடிந்து விழுந்து படுகாயம் அடைந்த சிறுவன்  உயிரிழந்தார்.

கோவை செல்வபுரம் பேரூர் ரோட்டில், அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு வசிப்பவர்கள் சிலர் தரைப்பகுதியில் ஆக்கிரமித்து சிறிய வீடுகள் கட்டி சிமெண்டு மேற்கூரை அமைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த, 3ம் தேதி அந்த பகுதியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது ஆக்கிரமிப்பு கட்டிடம் அருகே கிரிக்கெட் பந்து விழுந்துள்ளது. இதனை செல்வபுரம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சிறுவன் முகமது பாசில், 10, என்பவர் எடுக்க சென்றார். அப்போது பயன்பாட்டில் இல்லாத ஆக்கிரமிப்பு வீட்டின் சுவர் மழையில் காரணமாக திடீரென்று இடிந்து சிறுவன் மீது விழுந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிறுவன் முகமது பாசில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe