மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை

published 1 year ago

மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள பி.என்.புதூர் நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 70). இவரது மனைவி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்தார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பாலசுப்பிரமணியம் அக்டோபர் மாதம் விஷத்தை குடித்தார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக பாலசுப்பிரமணியத்தை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார்.

சம்பவத்தன்று வீட்டில் உள்ள அறையில் இருந்த பாலசுப்பிரமணியம் மீண்டும் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe