சென்னையில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த ரயிலில் அரசு ஊழியரிடம் 10 பவுன் நகை திருடிய வாலிபர் கைது..!

published 1 year ago

சென்னையில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த ரயிலில் அரசு ஊழியரிடம் 10 பவுன் நகை திருடிய வாலிபர் கைது..!

கோவை :சேலம் மேட்டூரை சேர்ந்தவர் ரத்தினசாமி (64). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கடந்த 12ம் தேதி பாலக்காட்டில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக சென்னை - பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார்.

 ரயில் கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அவர் அயர்ந்து தூங்கி விட்டதாக தெரிகிறது. பின்னர் விழித்து பார்த்தபோது தனது பேக்கை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். 

அதில் 10 பவுன் தங்க நகை இருந்தது. அதனை நைசாக மர்மநபர் திருடி சென்று விட்டார். இது குறித்து ரத்தினசாமி கோவை ரயில்வே போலீசில் புகார் அளித்தார். 

அவரின் பேரில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கோவை குறிச்சியை சேர்ந்த ராஜேஷ் குமார்(41), என்பவர் நகையை திருடி சென்றது தெரிய வந்தது.  தெரியவந்தது. இதனையடுத்து போலீசார்  அவரை கைது செய்து 10 பவுன் நகை பறிமுதல் செய்தனர். 
________

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe