கோவை வட்டாட்சியர் அலுவலகங்களில் சிறப்பு குறை தீர்ப்பு முகாம்

published 1 year ago

கோவை வட்டாட்சியர் அலுவலகங்களில் சிறப்பு குறை தீர்ப்பு முகாம்

கோவை: சனிக்கிழமை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருவதாகவும்

அதன் தொடர்ச்சியாக வருகின்ற 8ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிவரை பொது விநியோகத்திட்ட குறைதீர் சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கிவரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, அலைபேசி எண் மாற்றம்
தொடர்பான குறைகளை மனுக்களாக வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe