போலீஸ்காரர் பலியான விபத்தில் சிக்கிய இளைஞரும் பலி

published 1 year ago

போலீஸ்காரர் பலியான விபத்தில் சிக்கிய இளைஞரும் பலி

கோவை: கோவையில் டூ-வீலர்கள் மோதி போலீஸ்காரர் பலியான விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூடான் வாலிபரும் பலியானார்.

கோவை உக்கடம் போலீஸ் நிலையத்தில் எஸ்பிசிஐடி தலைமைக்காவலராக பணியாற்றி வந்தவர் மாரிமுத்து(49). இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் ஒப்பணக்கார வீதி பிரகாசம் சிக்னல் அருகே சென்ற போது எதிரே வந்த மொபட்டும், பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் போலீஸ்காரர் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்தில் மொபட்டில் வந்த சூடான் நாட்டை சேர்ந்த சுஹைப்(22), இப்ராஹிம்(23) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் கோவை தனியார் கல்லூரி மாணவரான இப்ராஹிம் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆனது. இந்த விபத்து தொடர்பாக கோவை மேற்கு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe