'பிராஜெக்ட் பள்ளிக்கூடம் 2.ஓ' திட்டத்தில் 'போலீசாருடன் ஒரு நாள்' நிகழ்ச்சி

published 1 year ago

'பிராஜெக்ட் பள்ளிக்கூடம் 2.ஓ' திட்டத்தில் 'போலீசாருடன் ஒரு நாள்' நிகழ்ச்சி

கோவை: ‘பிராஜெக்ட் பள்ளிக்கூடம், 2.ஓ’ திட்டத்தில் ‘போலீசாருடன் ஒரு நாள்’ நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்ட காவல் துறையினரின் ‘பிராஜெக்ட் பள்ளிக்கூடம் 2.ஓ’ திட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீ.கே., ரங்கசாமி நாயுடு மேல்நிலைப் பள்ளியில் பயிலும், 30 மாணவிகளுக்கு நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் “போலீசாருடன் ஒரு நாள்” என்ற நிகழ்ச்சி எஸ்.பி., பத்ரிநாராயணன் தலைமையில் நடைபெற்றது. 

இதையடுத்து மாணவிகள் பி.ஆர்.எஸ்., வளாகத்தில் உள்ள இறந்த காவல் துறையினரின் நினைவு துாண்களை பார்வையிட்டனர். பின் கோவை மாவட்ட ஆயுதப்படையின் ஆயுதக் கிடங்கில் உள்ள காவல் துறையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை கண்டு ரசித்தனர். 

தொடர்ந்து கோவை ரைபிள் கிளப்பை பார்வையிட்டனர். அங்கு துப்பாக்கிகளின் வகை மற்றும் அவற்றிற்கு இடையிலான வித்தியாசம் பற்றி மாணவிகளுக்கு உயர் அதிகாரிகள் எடுத்துக்கூறினார்கள். நிகழ்ச்சி நிறைவாக நினைவு பரிசாக அதிகாரிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் அனைத்து மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe