பாப்பநாயக்கன்பாளையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

published 1 year ago

பாப்பநாயக்கன்பாளையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

கோவை : பாப்பநாயக்கன் பாளையம், என்.ஜி.ராமசாமி சாலையில் அமைந்துள்ள வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடை, லட்சுமி மில் பணியாளர் கூட்டுறவு பண்டக சாலை நியாய விலைக் கடை, 100 அடி  சாலையிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நியாய விலைக் கடை ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பாப்பநாயக்கன் பாளையம், என்.ஜி.ராமசாமி சாலையில் அமைந்துள்ள கோயம்புத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையினை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட விவரம் குறித்த பதிவுகளை விற்பனை முனைய இயந்திரத்தினை இயக்கி ஆய்வு செய்ததுடன், இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களையும் கேட்டறிந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை உரிய நேரத்தில் வழங்கவும் விற்பனையாளர்களிடம் அறிவுறுத்தினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe