கணபதி அருகே மனைவியை கண்டுபிடித்து தரும்படி கணவன் போலீசில் புகார்..!

published 1 year ago

கணபதி அருகே மனைவியை கண்டுபிடித்து தரும்படி கணவன் போலீசில் புகார்..!

கோவை  : கோவை கணபதி சின்னசாமி நகரை சேர்ந்தவர் 30 வயது பெண். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இளம்பெண்ணுக்கு அவரை வேலைக்கு அழைத்து செல்லும் மேஸ்திரி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இரண்டு பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். கடந்த 23ம் தேதி இளம்பெண்ணின் கணவர் வேலைக்கு சென்று விட்டார். அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது இளம் பெண் மேஸ்திரியை தனது வீட்டிற்கு வரவழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து இளம்பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவித்தனர். 

அவர் தனது மனைவியை கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இளம்பெண் கணவரிடம் கோபித்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். மனைவியை அவரது கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் சரவணம்பட்டி போலீசில் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேஸ்திரியுடன் ஒட்டம்பிடித்த இளம்பெண்ணை தேடி வருகின்றனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe