கோவையில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்

published 1 year ago

கோவையில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்

கோவை  : கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 30, ஆட்டோ டிரைவர். அவர் தனது ஆட்டோவில் சிவானந்தபுரம் ரோட்டில் சென்றார். அப்போது அவருக்கு அறிமுகமான சிவானந்தபுரத்தை சேர்ந்த சரவணக்குமார் மற்றும் அவரது நண்பர் ஒருவர், சுரேஷ்குமாரின் ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. 

இதில் ஆத்திரம் அடைந்த சரவணக்குமார் மற்றும் அவரது நண்பர், சுரேஷ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி தப்பி சென்றனர். பலத்த காயம் அடைந்த சுரேஷ்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சுரேஷ்குமார் புகாரின் படி சரவணக்குமார் மற்றும் அவரது நண்பர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe