கிரிக்கெட் பந்தை எடுக்க முயன்றபோது விபரீதம் மேற்கூரையில் இருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் பலி

published 2 years ago

கிரிக்கெட் பந்தை எடுக்க முயன்றபோது விபரீதம்   மேற்கூரையில் இருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் பலி

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/FeDW9xUn2U8AbIvNabKtk1

கோவை, ஜூன்.14- ஒடிசாவை சேர்ந்தவர் கார்த்திக் போய் (வயது 31). இவர் கோவை சரவணம்பட்டியில் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் விடுமுறை நாளில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.

இதேபோன்று, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர் தனது நண்பர்களுடன் சரவணம்பட்டி அம்மன்நகரில் உள்ள கம்பெனி வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பந்தை அடித்த போது கம்பெனியில் மேற்கூரையில் விழுந்தது. இதனை எடுக்க கார்த்திக் போய் மேலே ஏறினார். அப்போது பந்தை எடுக்க முயன்ற போது மேற்கூரை பெயர்ந்து சுமார் 20 அடி உயரத்தில் இருந்து அவர் கீழே விழுந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர்  வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து  சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe