கோவையில் நூல் அனுப்புவதாகக் கூறி மும்பை வியாபாரியிடம் ரூ.18.50 லட்சம் மோசடி

published 1 year ago

கோவையில் நூல் அனுப்புவதாகக் கூறி மும்பை வியாபாரியிடம் ரூ.18.50 லட்சம் மோசடி

கோவை :  நூல் அனுப்புவதாகக் கூறி மும்பை வியாபாரியிடம் ரூ.18.50 லட்சம் மோசடி செய்ததாக 2 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மும்பையைச் சேர்ந்தவர் பாரேக். இவர் டெக்ஸ்டைல் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், சில ஆண்டுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் காஜா உசேன் ஆகியோர் பாக்கிற்குத் தொழில் ரீதியாகப் பழக்கமானார்கள். 

இவர்கள் இருவரும் நூல் வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களிடம் பாரேக் நூல் அனுப்பச் சொல்லி ரூ.18.50 லட்சத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்டு இருவரும் நூல் அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதையடுத்து பாரேக் நூல் அனுப்பவில்லை என்றால் நான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். 

தொடர்ந்து ரமேஷ் மற்றும் காஜா உசேன் ஆகியோர் காசோலைகளை பாரேக்கிற்கு அனுப்பி வைத்தனர். அதனை அவர் வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பியது.

இதனால், ஏமாற்றப்பட்ட பாரேக் இருவரையும் பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து பாரேக் உக்கடம் போலீசில் புகார் அளித்தார். அதில், நூல் அனுப்புவதாகக் கூறி என்னிடம் ரூ.18,50,972 பணத்தை மோசடி செய்த ரமேஷ் மற்றும் காஜாஉசேன் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு தெரிவித்திருந்தார். அவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறை ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் நூல் வியாபாரிகள் ரமேஷ், காஜா உசேன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe