10 ஆண்டுகளாக 'செக்' மோசடி வழக்கில் தேடப்பட்டவர் சரணடைந்தார்

published 1 year ago

10 ஆண்டுகளாக 'செக்' மோசடி வழக்கில் தேடப்பட்டவர் சரணடைந்தார்

கோவை: கோவை, ஆர்.எஸ். புரத்தை சேர்ந்தவர் கண்ணன். ரியல் எஸ்டேட் அதிபர். இவரது நாமக்கல் கிளையில், கரடிப்பட்டி அருகேயுள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்த நல்லுசாமி என்பவர் மேலாளராக பணியாற்றினார். 

இவர் கண்ணன் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் வீட்டுமனைகள் விற்பனை செய்து ரூ.52 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது. பணத்தை திருப்பி கேட்ட போது, 4 காசோலைகளை நல்லுசாமி கண்ணனிடம் கொடுத்தார்.  

ஆனால் அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பியது. இதனால் நல்லுசாமி மீது, காசோலை மோசடி வழக்கை விசாரிக்கும், கோவை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் 2013ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜராகாததால் நல்லுசாமிக்கு 'பிடிவாரண்ட் பிறப் பிக்கப்பட்டது. தொடர்ந்து 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நல்லுசாமி கடந்த 21ம் தேதி கோர்ட்டில் சரண் அடைந்தார். இதனைத் தொடர்ந்து 2 மாதங்கள், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe