பீளமேட்டில் மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து விபச்சாரம்

published 1 year ago

பீளமேட்டில் மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து விபச்சாரம்

கோவை : கோவை பீளமேடு அவினாசி ரோட்டில் தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் உள்ள 3வது மாடியில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து பீளமேடு போலீசார் தகவல் வந்த ஓட்டலுக்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் அங்குள்ள மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் போலீசார் அழகிகளை வைத்து விபச்சார தொழில் செய்து வந்த புலியகுளத்தை சேர்ந்த ஸ்ரீ ஹரி (வயது 47) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அங்குள்ள அறைகளில் விபச்சாரத்திற்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த மைசூர், திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 அழகிகளை போலீசார் மீட்டனர். பின்னர் அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட விபச்சார புரோக்கரிடம் நடத்திய விசாரணையில் அவர் அழகிகளின் புகைப்படங்களை வாட்ஸ்-அப் மூலமாக அனுப்பி வாலிபர்களை விபச்சாரத்திற்கு அழைத்தது தெரியவந்தது.

விசாரணைக்குப்பின்னர் புரோக்கர் ஸ்ரீ ஹரியை போலீசார் கோர்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe