மிலாடி நபியை முன்னிட்டு 12ஆயிரம் பேருக்கு இலவச குஸ்கா…

published 1 year ago

மிலாடி நபியை முன்னிட்டு 12ஆயிரம் பேருக்கு இலவச குஸ்கா…

கோவை: உக்கடம் 
ஜி.எம்.நகர் பகுதியில் சுன்னத் ஜமாத் யூத் பெடரேசன்  சார்பில் 12 ஆயிரம் பேருக்கு  மிலாடிலநபியை முன்னிட்டு  இலவசமாக குஸ்கா வழங்கப்பட்டது.



மிலாடி நபியை முன்னிட்டு 
கோவையில் உள்ள பள்ளிவாசல்களில் பொது மக்களுக்கு குறைந்த விலையில் பிரியாணி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் இலவசமாக பிரியாணி மற்றும் குஸ்கா ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உக்கடம் தீம் நகர் பகுதியில் உள்ள சுன்னத் ஜமாத் யூத் பெடரேசன்  சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக குஸ்கா வழங்கப்பட்டது. 12000 பேருக்கு இலவசமாக குஸ்கா வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் அதிகாலையிலேயே பொதுமக்கள் நீண்ட வரிசையில் மூன்று குஸ்காவினை வாங்கி சென்றனர். 

மிலாடி நபியை முன்னிட்டு  இலவச குஸ்கா வழங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருவதாகவும், ஒன்பதாவது ஆண்டாக இலவசமாக குஸ்கா  அனைத்து சமூக மக்களுக்கும் வழங்கப்பட்டு வருவதாகவும் நிகழ்ச்சி ஏற்பட்டாடாளர்கள் தெரிவித்தார். இந்த குஸ்கா தயாரிப்பு நிகழ்வு இரவு துவங்கி விடிய விடிய தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe