கோவையில் மழை வேண்டி மழைச்சோறு எடுத்த பெண்கள்..!

published 1 year ago

கோவையில் மழை வேண்டி மழைச்சோறு எடுத்த பெண்கள்..!

கோவை: கோவையில் இந்தாண்டு பருவமழை பொய்த்துள்ள நிலையில் அரசூர் பகுதி பெண்கள் மழைச்சோறு எடுத்து வழிபாடு நடத்தினர்.

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றியுள்ளது. போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். விவசாய பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சூலூர் வட்டாரத்தில் மானாவாரி நிலத்தில் கூட விதைக்கும் பணி தாமதமாகி உள்ளது. இதையடுத்து, மழைச்சோறு எடுத்து, கோவில்களில் வழிபாடு நடத்த சூலூரை அடுத்த அரசூர் கிராம மக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி அரசூரில் உள்ள பரமசிவன் கோவில், விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில், காமாட்சி அம்மன் கோவில்களில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பெண்கள், சிறுமிகள் தலையில் மூங்கில் கூடைகளை வைத்துக்கொண்டு வீடு, வீடாக சென்று, வீட்டில் வடித்த சோற்றை பெற்று ஊர்வலமாக அனைத்து வீதிகளிலும் சென்றனர். மழை பெய்ய வேண்டி, பெண்கள் பாடியபடி ஊர்வலத்தில் சென்றனர். அனைத்து கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தி, சோற்றை படையல் இட்டு, இறைவனிடத்தில் மழை பெய்ய அருள் செய்யுமாறு வேண்டி கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe