டிரைவர் வீட்டில் நகை, பணம் கொள்ளை…

published 1 year ago

டிரைவர் வீட்டில் நகை, பணம் கொள்ளை…

கோவை: கோவை நீலிகோணாம்பாளையம் தாமோதரசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் விஜயகுமார் (38), தனியார் பள்ளி பஸ் டிரைவர். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பினார். அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த விஜயகுமார் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் நகை, ரூ.25 ஆயிரம் பணம் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது. 

இது குறித்து விஜயகுமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவயிடத்துக்கு கைரேகை நிபுணர்களுடன் போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது வீட்டில் பதிவாகியிருந்த ஒரு கைரேகை பதிவை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

இதே போல், கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலிகோணாம்பாளையம் தாமோதர சாமி லே-அவுட்டில் 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது. இந்த கொள்ளை சம்பவங்களில் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe