குளத்தில் மூழ்கி வாலிபர் பலி…

published 1 year ago

குளத்தில் மூழ்கி வாலிபர் பலி…

கோவை: கோவை உக்கடம் வின்சென்ட் ரோட்டை சேர்ந்தவர் கிருபாகர்(27). மீன் பிடி தொழிலாளி. இவர் நேற்று உக்கடம் பெரிய குளத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது குளத்தில் ஆண் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 

சம்பவ இடத்துக்கு வந்த பெரியகடைவீதி போலீசார் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 40 வயது மதிக்கத்தக்க அவர் யார்? எந்த ஊர் என்பன போன்ற விவரம் உடனே தெரியவரவில்லை. அவர் குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கியதில் பலியானாரா? அல்லது வேறு காரணமா என பெரியகடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe