பியூட்டி பார்லரில் விபசாரத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது...

published 1 year ago

பியூட்டி பார்லரில் விபசாரத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது...

கோவை: கோவையில் பியூட்டி பார்லரில் விபசாரத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இளம்பெண் ஒருவர் மீட்கப்பட்டார்.
 

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் 2வது தளத்தில் பியூட்டி பார்லர் செயல்பட்டு வருகிறது. இங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில், காட்டூர் போலீசார் நேற்று அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பியூட்டி பார்லர் என்ற பெயரில் இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் விபசாரம் நடத்திய கேரளா பாலக்காட்டை சேர்ந்த சுஜிஸ்(37), சென்னை பல்லவன் நகர் 3வது தெருவை சேர்ந்த கோவிந்தன் மனைவி அழகு கலை நிபுணர் புஸ்பலதா(29), பெரம்பலூர் துரைமங்கலத்தை சேர்ந்த அழகு கலை நிபுணர் அப்பாஸ் மனைவி விஜயசாந்தி(34) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபட்ட திருப்பூர் அவிநாசியை சேர்ந்த 27 வயது இளம்பெண்ணை மீட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe