கோவைக்கு மீண்டும் வந்தே பாரத் ரயில்..! மகிழ்ச்சியில் பயணிகள்

published 1 year ago

கோவைக்கு மீண்டும் வந்தே பாரத் ரயில்..! மகிழ்ச்சியில் பயணிகள்

கோவை: கோவையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே தரப்பில் கூறியதாவது:

சென்ட்ரல்-கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்கள் நவம்பர் 28-ஆம் தேதி முதல் செவ்வாய்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் சென்னையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு கோவை சென்றடையும். பின்னர் கோவையில் இருந்து 3.05 மணிக்கு புறப்படும். மற்றும் 9.50 மணிக்கு சென்னை வந்தடையும்.

இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்கின்றது.

இவ்வாறு ரயிவே நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe