சிங்காநல்லூர் பகுதியில் கோவில் கதவை உடைத்து பொருட்கள் கொள்ளை...

published 1 year ago

சிங்காநல்லூர் பகுதியில் கோவில் கதவை உடைத்து பொருட்கள் கொள்ளை...

கோவை: கோவை சிங்காநல்லூர் அடுத்த ஆர்.கே.கே நகரில் சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ரவி என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் சம்பவ தினத்தன்று வழக்கம்போல பூஜையை முடித்து விட்டு கோயிலை பூட்டி விட்டு சென்றார். 

இந்நிலையில், மறுநள் காலை கோயில் முன்பு சுத்தம் செய்வதற்காக சத்யா என்பவர் சென்றார். அப்போது அவர் கோயில் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்தார். உடனே அவர் கோயில் நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து பார்த்த போது கோயிலில் இருந்த பித்தளை சொம்பு, தட்டு, விளக்கு உள்ளிட்ட ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. 

இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe