கோவை-பொள்ளாச்சிக்கு 25ம் தேதி முதல் கூடுதல் ரயில்

published 1 year ago

கோவை-பொள்ளாச்சிக்கு 25ம் தேதி முதல் கூடுதல் ரயில்

கோவை: கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு வரும் 25ம் தேதி முதல் கூடுதல் ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கோவையில் இருந்து பொள்ளாச்சி வழித்தடத்தில் பழனி, மதுரைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 25ம் தேதி முதல் கோவை ரயில் நிலையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு கூடுதல் ரயில் சேவை தொடங்கிவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ரயிலானது திங்கள்கிழமை (25ம் தேதி) முதல் கோவையில் இருந்து காலை 5.20 மணிக்குப் புறப்பட்டு பொள்ளாச்சி ரயில் நிலையத்தை காலை 6.30 மணிக்கு சென்றடையும்.

பொள்ளாச்சியில் இருந்து காலை 7.30 மணிக்குப் புறப்பட்டு கோவைக்கும் காலை 8.45 மணிக்கு வந்தடையும்.

இதேபோல பிற்பகல் மற்றும் இரவு என மொத்தம் 3 டிரிப்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 6.30 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும் ரயிலில் செல்லும் பயணிகள், பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு காலை 6.50 மணிக்கு வந்தடையும் பாலக்காடு திருச்செந்தூர் ரயிலில் பயணிக்க வசதியாக இந்த கூடுதல் சேவை இயக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe