திருமணம் செய்வதாக கூறி கோவை ஐ.டி., ஊழியரிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பு…

published 1 year ago

திருமணம் செய்வதாக கூறி கோவை ஐ.டி., ஊழியரிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பு…

கோவை: கோவையில் திருமணம் செய்வதாக ஏமாற்றி ஐடி ஊழியரிடம் ரூ. 67 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக இளம்பெண் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் கருவலூர் நைனாம்பாளையத்தை சேர்ந்தவர் சபரிநாதன்(33). இவர் கோவை விளாங்குறிச்சி பகுதியில் தங்கி ஐடி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். 
அப்போது இவருக்கு கோவையை சேர்ந்த வித்யபிரபா(28) என்பவர் அறிமுகமானார். வித்யபிரபா சபரிநாதனை திருமணம் செய்வதாக கூறினார். மேலும் வித்யபிரபா பணம் கேட்டதின் பேரில், சபரிநாதன் சிறிது சிறிதாக கடந்த 2020ம் ஆண்டு முதல் வித்யபிரபாவின் வங்கி கணக்குகளில் ரூ. 67 லட்சம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

அதில், தனது நண்பர்கள், உறவினர்களிடம் பணம் வாங்கி சபரிநாதன் அவருக்கு கொடுத்ததாகவும் தெரிகிறது. அதன் பின்னர் வித்யபிரபா வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டார். 
இதனையறிந்த சபரிநாதன் வித்யபிரபாவிடம் தனது பணத்தை திருப்பி கொடுத்து விடும்படி கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார். இதற்கு வித்யபிரபாவுக்கு சிலர் உதவி செய்துள்ளனர். 

இது குறித்து சபரிநாதன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் திருமணம் செய்வதாக ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட வித்யபிரபா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கருப்புசாமி, லோகநாயகி, கணேஷ், சந்தோஷ், பஞ்சவர்ணம், சுபாஷ், சந்தியா ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe