நகை வடிவமைத்து தருவதாக வியாபாரியிடம் தங்கம் வாங்கி ரூ.75 லட்சம் மோசடி...

published 1 year ago

நகை வடிவமைத்து தருவதாக வியாபாரியிடம் தங்கம் வாங்கி ரூ.75 லட்சம் மோசடி...

கோவை: கோவையில் நகை வடிவமைத்து தருவதாக வியாபாரியிடம் தங்கம் வாங்கி ரூ.75 லட்சம் மோசடி நடைபெற்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை செல்வபுரம் அசோக் நகரை சேர்ந்தவர் திலீப் குமார்(55). நகை வியாபாரி. இவர் ஆர்டரின் பேரில், தங்கம் வாங்கி நகைகளாக வடிவமைத்து விற்பனை செய்து வருகிறார். இதேபோல், தொழில் செய்து வரும் கோவை செட்டி வீதியை சேர்ந்த பாண்டியன்(45) என்பவரிடம் திலீப் குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1734.390 கிராம் தங்கத்தை கொடுத்து நகை ஆபரணங்களாக வடிவமைத்து தருமாறு கேட்டு கொண்டதாக தெரிகிறது. தங்கத்தை பெற்று கொண்ட பாண்டியன் 321.55 கிராம் நகைகளை மட்டும் திருப்பி கொடுத்தார். மீதமுள்ள 1412.840 கிராம் தங்கத்தை திருப்பி கொடுக்க வில்லை. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும். 

இதனால் ஏமாற்றமடைந்த திலீப் குமார் தான் கொடுத்த தங்கத்தை திருப்பி தருமாறு பாண்டியனிடம் கேட்டு வந்தார். அதற்கு அவர் பல்வேறு காரணங்களை கூறி தங்கத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். இது குறித்து திலீப் குமார் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe