நகை பெட்டியில் வைத்திருந்த நகைகள் கொள்ளை- போலிசார் விசாரணை...

published 1 year ago

நகை பெட்டியில் வைத்திருந்த நகைகள் கொள்ளை- போலிசார் விசாரணை...

கோவை: கோவை ரத்தினபுரி பி.எம்.சாமி காலனி தெருவை சேர்ந்தவர் ஆனந்தகுமார் மனைவி நிவேதா(33). இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெக்லஸ், கம்மல் உள்ளிட்ட 9 பவுன் தங்க நகைகளை வீட்டில் ஒரு பெட்டியில் வைத்திருந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில், அவர் கடந்த 3ம் தேதி நகைகளை எடுக்க பெட்டியை பார்த்தபோது அதில் இருந்த 9 பவுன் நகைகளை காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். யாரோ வீட்டில் நைசாக புகுந்து நகைகளை திருடியதாக கூறப்படுகிறது. இது குறித்து நிவேதா ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe