ஆரோக்கியமான கோவை விழிப்புணர்வு மாரத்தான்- 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...

published 1 year ago

ஆரோக்கியமான கோவை விழிப்புணர்வு மாரத்தான்-  5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...

கோவை: நேரு விளையாட்டு அரங்கம் அருகில் கோயம்பத்தூர் விழாவின் ஒரு நிகழ்ச்சியாக ஆரோக்கியமான கோவை என்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.  இதில் ஐந்து வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 


 

இந்த மாரத்தான் போட்டி 2.5 கிமீ, 5கிமீ, 10கிமீ என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தனர். மேலும் இதில் பத்து கிலோமீட்டர் பிரிவ  ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையாளர்  உட்பட காவல்துறையினர், பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் பங்கேற்றது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாரத்தான் போட்டிகள் பங்கேற்ற பலரும் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe