இடையர்பாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை திருட்டு...

published 1 year ago

இடையர்பாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை திருட்டு...

கோவை: கோவையில் வீட்டு பூட்டை உடைத்து 11 பவுன் நகை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை இடையர்பாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் கோபாலன்(81). இவர் தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கோபாலன் கடந்த 5ம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் குருவாயூர் கோயிலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று கோவை திரும்பினர். வீட்டுக்கு சென்ற போது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இது குறித்து கோபாலன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe