தமிழகத்தில் நாளை முதல் ஸ்டிரைக்.. அரசு பேருந்துகள் ஓடாது!

published 1 year ago

தமிழகத்தில் நாளை முதல் ஸ்டிரைக்.. அரசு பேருந்துகள் ஓடாது!

சென்னை: அரசுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாததால் திட்டமிட்டபடி நாளை முதல் ஸ்டிரைக் நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

காலியாக இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வின் ஓய்வூதியர்களுக்கும் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. 

இதனிடையே போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர் நல இணை ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததால் தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. 

இதனால் திட்டமிட்டபடி நாளை முதல் ஸ்டிரைக் நடத்தப்படும் என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் நாளை பெரும்பாலான அரசு பேருந்துகள் இயங்காது.

இதனிடையே பொங்கல் பண்டிகைக்கு திட்டமிட்டபடி 19,000 பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

அரசு பேருந்துகள் நாளை முதல் இயங்காது என்ற அறிவிப்பை தொடர்ந்து பொது போக்குவரத்தை நம்பியுள்ள மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe