சிங்காநல்லூரில் திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது...

published 1 year ago

சிங்காநல்லூரில் திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது...

கோவை: கோவை சிங்காநல்லூரில் திருட்டில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் என்.கே பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி மனைவி ரேணுகா தேவி(38). இவர் ஒண்டிப்புதூர் விஐபி நகரில் புதிய வீடு கட்டி வருகிறார். அங்குள்ள ஒரு அறையில் வீடு கட்ட தேவையான கட்டுமான பொருட்களை வைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த 8ம் தேதி ரேணுகாதேவி கட்டுமான பணிகளை பார்க்க சென்றார். அப்போது அங்கு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது சுமார் 60 ஆயிரம் மதிப்பிலான ஒயர், பித்தளை பூட்டு, ஜன்னல் கைப்பிடி உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், அறையின் பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்றது கோவை காமாட்சி புரம் அண்ணாநகரை சேர்ந்த தேவி(30), ஒண்டிப்புதூர் அன்னை சத்யா நகரை சேர்ந்த சரஸ்வதி(40) ஆகியோர் என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe