ரூ. 5 ஆயிரம் திருடிய வாலிபர் கைது…

published 1 year ago

ரூ. 5 ஆயிரம் திருடிய வாலிபர் கைது…

கோவை: கோவை குரும்பபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்(29). இவர் வஉசி பூங்கா அருகே உள்ள மாநகராட்சி கழிப்பிடத்தில் பராமரிப்பு இன்சார்ஜாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்குள்ள டேபிள் டிராயரில் வைத்திருந்த ரூ. 5 ஆயிரத்தை மர்ம நபர் திருடி சென்று விட்டார். 

மேலும் அங்கு சுகாதார பணியில் ஈடுபட்டிருந்த கோவை பாலமலை வஞ்சிமா நகரை சேர்ந்த தியாகராஜன்(31) என்பவரும் மாயமானார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த கார்த்திகேயன் அவரை தேடினார். பின்னர் ரயில் நிலையம் அருகே சுற்றிய தியாகராஜனை பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் பணம் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தியாகராஜனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe