பல்லடத்தில் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்; போலீசாரின் அலட்சியத்தால் என்று புகார்...

published 1 year ago

பல்லடத்தில் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்; போலீசாரின் அலட்சியத்தால் என்று புகார்...

கோவை: பல்லடத்தில் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசபிரபு. இவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு நேசபிரபு நேற்று அவரது வீட்டில் இருந்து வெளியே வந்த போது மர்ம நபர்கள் நேச பிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக தன்னை சிலர் பின் தொடர்வதாகவும், அச்சுறுத்தல் இருப்பதாகவும் காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு போனில் தகவல் அளித்துள்ளார்.

போனில் பேசிய காமநாயக்கன்பாளையம் போலீஸ்காரர் காவல் நிலையத்தில் வந்து புகார் கொடுக்குமாறு அலட்சியமாக கூறியுள்ளார். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற தாக்குதல் நடைபெற்றிருக்காது என்று கூறும் பத்திரிகையாளர் நலச்சங்கங்கள் உடனடியாக தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அலட்சியமாக செயல்பட்ட போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe