கோவையில் மதுகுடிக்க பணம் கேட்டு தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்

published 1 year ago

கோவையில் மதுகுடிக்க பணம் கேட்டு தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்

கோவை: மதுகுடிக்க பணம் கேட்டு தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (39). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் தடாகம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 பேர் ஆனந்தகுமாரிடம் மது வாங்க பணம் கொடுக்குமாறு கேட்டனர். அதற்கு ஆனந்தகுமார் கொடுக்க மறுத்ததுடன் தனது பைக்கில் புறப்பட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அவரை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து உதைத்தனர்.

பின்னர் அவரை மிரட்டி விட்டு சென்றனர். இதுகுறித்து ஆனந்தகுமார் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரித்ததில், ஆனந்தகுமாரை தாக்கியது சகோதரர்கள் மணிகண்டன் மற்றும் வேணுகோபால் என்பது தெரியவந்தது. போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe