சாய்பாபாகாலனி, கே.கே.புதூரில் மருத்துவ காப்பீட்டுத் திட்ட முகாம்..!

published 11 months ago

சாய்பாபாகாலனி,  கே.கே.புதூரில் மருத்துவ காப்பீட்டுத் திட்ட முகாம்..!

கோவை: கோவை மாநகராட்சி 45 வது வார்டில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

 

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 45 வார்டுக்கு உட்பட்ட சாய்பாபாகாலனி,  கே.கே.புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் 45 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பேபி சுதா ரவி முகாமை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், சாய்பாபாகாலனி பகுதி கழக செயலாளர் கே.எம்.ரவி, பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி, என பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe