கோவையில் காவலர்கள் தபால் வாக்குப்பதிவு...

published 10 months ago

கோவையில் காவலர்கள் தபால் வாக்குப்பதிவு...

கோவை: கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள காவலர்கள் சமுதாயக் கூடத்தில் 
காவலர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வரும் 19-ம் தேதி மக்களவை தேர்தலை ஒட்டி கோவையில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்தும் நிகழ்வு இன்றும்,நாளையும் ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து கோவை,பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்டவர்கள் கோவை உப்பிலிபாளையம் காவலர் சமுதாயக்கூடத்திலும் மற்ற தொகுதிகளுக்குட்பட்டவர்கள் அதற்கு எதிரேயுள்ள சிஎஸ்ஐ பள்ளியிலும் வாக்களிக்க மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்டும் காவலர்கள் நேரில் வந்து அஞ்சல் வாக்கு செலுத்தினர். .வாக்குப்பதிவானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அவரது அஞ்சல் வாக்கை செலுத்தினார் 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe