கோவையில் வாகன ஓட்டிகளுக்காக போடப்பட்ட பசுமைப்பந்தல் டர்ர்...!

published 2 weeks ago

கோவையில் வாகன ஓட்டிகளுக்காக போடப்பட்ட பசுமைப்பந்தல் டர்ர்...!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/CFoSUzRjtqAEmBrOacEIKZ

கோவை: கோவையில் வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட பசுமைப்பந்தல் இன்று வீசிய சூறைக்காற்றில் சேதமடைந்துள்ளது.

கோவையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், பத்துக்கும் மேற்பட்ட இடங்களில், சிக்னல்களிலும், சோதனைச் சாவடிகளிலும் பசுமைப்பந்தல்களை மாநகராட்சி நிர்வாகம் அமைத்து வருகிறது.


இதனிடையே கண்ணப்ப நகர் சோதனை சாவடியில் நேற்று பசுமைப்பந்தல் அமைக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்று மதியம் முதல் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் கண்ணப்ப நகர் சோதனை சாவடியில் அமைக்கப்பட்ட பசுமைப்பந்தல் முழுமையாக சேதமடைந்துள்ளது.


இது வாகன ஓட்டுகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw