நலிவடைந்தோரின் கல்விக்கு உதவிய நா.கார்த்திக்..!

published 2 weeks ago

நலிவடைந்தோரின் கல்விக்கு உதவிய நா.கார்த்திக்..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் நலிவடைந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித் தொகையை தி.மு.க.,வின் கோவை மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் வழங்கினார்.

டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் பொருளாதாரம் நலிவடைந்த சூழலில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் கல்விக்கு உதவி செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., செயலாளர் நான் கார்த்திக், பீளமேடு அண்ணாநகர் அலுவலகத்தில் நடைபெற்ற உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கினார்.


இந்த நிகழ்வில் தி.மு.க., மாநில தொழிலாளர் அணி துணைச் செயலாளர் நான் தமிழ்செல்வன் கோவை மாவட்ட தொழிற்சங்க தலைவர் ராக்கி முத்து பொருளாளர் கண்ணன் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து கோவை பீளமேடு பகுதி தி.மு.க., சார்பில், அவினாசி சாலை, பி.எஸ்.ஜி., கல்லூரி அருகில்  அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை நா.கார்த்திக் திறந்து வைத்தார். 
 





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw