நலிவடைந்தோரின் கல்விக்கு உதவிய நா.கார்த்திக்..!

published 9 months ago

நலிவடைந்தோரின் கல்விக்கு உதவிய நா.கார்த்திக்..!

கோவை: கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் நலிவடைந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித் தொகையை தி.மு.க.,வின் கோவை மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் வழங்கினார்.

டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் பொருளாதாரம் நலிவடைந்த சூழலில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் கல்விக்கு உதவி செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., செயலாளர் நான் கார்த்திக், பீளமேடு அண்ணாநகர் அலுவலகத்தில் நடைபெற்ற உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கினார்.

இந்த நிகழ்வில் தி.மு.க., மாநில தொழிலாளர் அணி துணைச் செயலாளர் நான் தமிழ்செல்வன் கோவை மாவட்ட தொழிற்சங்க தலைவர் ராக்கி முத்து பொருளாளர் கண்ணன் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து கோவை பீளமேடு பகுதி தி.மு.க., சார்பில், அவினாசி சாலை, பி.எஸ்.ஜி., கல்லூரி அருகில்  அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை நா.கார்த்திக் திறந்து வைத்தார். 
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe